சித்த மருத்துவத்தில் கட்டு கட்டுகின்ற முறை ஒருவகை புற மருத்துவம் ஆகும். கட்டு மருத்துவம் பல வகைப்படும். எலும்பு முறிவு ஏற்படும் போது எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை துல்லியமாகச் சேர்த்து, முறையாக துணி சுற்றி, எலும்புப் பகுதி விலகாமல், மூங்கில் பட்டை போன்றவற்றை வைத்து எலும்புக்கூடும் வரை கட்டு போடுவது எலும்பு முறிவு கட்டு அல்லது என்பு முறிவு கட்டு மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.