VYM-Othadam.jpg

சித்த மருத்துவத்தில் ஒற்றடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றும் நம் வீடுகளில் வலிகளுக்கு ஒற்றடமும், சுளுக்கு மற்றும் ரத்தக்கட்டுக்கு ஐஸ்கட்டி எனப்படும் குளிர்ந்த நீரோட்டம் கொண்டு ஒற்றடம் வைக்கும் வழக்கம் உள்ளது. புற மருத்துவ சிகிச்சையில் ஒன்றான ஒற்றடம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்பத்தை உண்டாக்கப் பயன்படுகிறது. சுண்ணாம்புக்காரை, தவிடு, செங்கல்பொடி, மணல், மூலிகை இலைகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்றை வறுத்து துணியில் முடிந்து நோயுள்ள இடத்தில் ஒற்றி எடுத்தல் இலைக்கிழி ஒற்றடம் எனப்படுகிறது.