நுரையீரலுக்கு செல்லும் காற்றின் வழி குறுகும்போது சளி மிகுதியாக உருவாகிறது. அதனால் மூச்சுக்காற்று செல்லும் பாதை அடைபட்டு மூச்சு விட பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையே இரைப்பு நோய் எனப்படும். இப்படி மூச்சு இரைக்கும்போது இருமல், இரைப்பு, மூச்சு வாங்குதல் போன்ற தொல்லைகள் ஏற்பட்டு.
எல்லா சித்த மருத்துவர்களும் நோயர்களோடு நிறைய உரையாடுவார்கள். நோயர்கள் எத்தகைய நோய் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள இந்த உரையாடல்கள் உதவுகின்றன. இதிலிருந்து என்ன மாதிரியான நோய்கள் ஒருவரை தாக்கியுள்ளது என்ற புரிதல் சித்த மருத்துவருக்கு ஏற்படுகிறது.
வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று தத்துவங்களையும் நாடி பிடித்துப் பார்க்கும்போது உணர முடிகிறது. இந்த மூன்றிலும் ஏற்படும் விகிதாச்சார மாறுதல்களில் குற்றம் கண்டுபிடித்து நோயறியும் முறையை அனுபவமிக்க சித்த மருத்துவர்கள் கடைபிடிப்பார்கள்.
சித்த மருத்துவத்தில் பின்பற்றப்படும் “நெய்க்குறி” என்ற முறைமை ஒரு தனித்துவமான நோயறிதல் முறை ஆகும். இந்த முறையில் புதிதாக நோயரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரின் மேல் ஒரு சொட்டு நல்லெண்ணெய் அதன் மேற்பரப்பில் விடப்படுகிறது. அப்படி விடப்பட்ட நல்லெண்ணெய்த் துளி எப்படி சிறுநீரில் பரவி இறங்குகிறது என்று கூர்ந்து கவனித்து நோயறியப்படுகிறது.
நமது மண்டை ஒட்டுப்பகுதியில் உள்ள வடிகுழல்களில் (sinuses) ஏற்படும் அழற்சி நிலையே பீனிசம் ஆகும். சில நேரங்களில் இந்த வடிகுழல்களின் ஓரங்களில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சி பீனிசத்தை ஏற்படுத்துகிறது
நுரையீரலை தாக்கும் ஒரு வித பாக்டீரியாக்களால் உண்டாவதே காச நோயாகும். மைகோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியா வகை இந்த நோயை உண்டுசெய்கிறது. இது ஒரு தொற்று நோய் ஆகும்
கல்லீரலால் பிலிரூபின் என்ற உயிர்-வேதிப்பொருளை கரைக்க முடியவில்லை என்றால் அது திரண்டு நாளடைவில் ஏற்படுத்தும் நிலையையே காமாலை என்று கூறுகிறார்கள்.
கொழுப்பு படிந்த கல்லீரல் தனது அடுத்த நிலைக்கு போய், கல்லீரலையே சுருக்கும்போது கல்லீரல் சிதைவு ஏற்படுகிறது. சிதைவு ஏற்பட்ட கல்லீரல் இனியும் நல்லபடிக்கு இயங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பித்தப்பையிலும், கல்லீரலில் உள்ள பித்த நீர் குழாய்களிலும் சேருகின்ற கற்களே பித்தக்கற்கள் ஆகும். பித்தநீர் கெட்டியாகும்போது கற்கள் உருவாகின்றன.
ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் குறையும்போதோ, அல்லது ஆரோக்கியமான சிகப்பணுக்கள் எண்ணிக்கையில் குறையும்போதோ ஏற்படும் உடல் கோளாறுக்கு பெயர் தான் வெளுப்பு நோய்.
வயிற்றின் உள்சுவற்றில் உள்ள மெல்லிய திசுப்படலம் அழற்சி அடையும்போது ஏற்படக்கூடிய நோயை இரைப்பை அழற்சி என்று கூறுகிறார்கள். இதற்கும் குன்மத்திற்கும் வேறுபாடு உண்டு. இதுவும் குன்மத்தில் ஒரு வகையாகும்.
ஆசனவாயின் உள் பகுதியில் ஏற்படும் பிளவே ஆசன வாய் பிளவு எனப்படுகிறது. மலச்சிக்கலால் இறுகிப்போன மலம் வெளியே தள்ளப்படும்போது ஆசனவாய் பிளவுபடுகிறது. இறுகிய மலம் என்பது நாள்பட்ட மலச்சிக்கலால் ஏற்படுவது.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மகவின்மை பிரச்சனை நேருகின்றது. தரமில்லாத விந்தணுக்கள், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் நகர்தலில் ஏற்படும் கோளாறுகள், போன்ற காரணங்களால் ஆண்களுக்கு மகவின்மை ஏற்படுகின்றது.
தவறான உணவு, போதுமான அளவு நீர் அருந்தாதது, மரபு, கீல் நோய், வெகு காலங்களாக கால்ஷியம் மாத்திரைகளை உட்கொள்ளுவது, போன்ற காரணங்களால் கல்லடைப்பு ஏற்படுகிறது.
உள் தசையில் ஏற்படும் மெல்லிய ஓட்டை, உள்ளே இருக்கும் குடல் பகுதியை வெளியே துருத்த காரணமாக இருக்கும். இதை தான் குடலிறக்கம் என்றும் கூறுகிறோம்.
உள்ளே உள்ள மலக்குடலுக்கும், ஆசனவாய்க்கும் இயல்புக்கு மாறாக ஏற்படும் எந்த தொடர்பும் பவுத்திரம் எனப்படும். முதலில் மலக்குடலில் இருந்து பிரியும் இந்த தொடர்பு வழி பிறகு மெல்ல உள்ளுக்கே வளர்ந்து பிட்டத்தின் வெளியே வெளிப்படுவது உண்டு.
அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.
பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.
குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.