2007-ம் ஆண்டு தனது பட்ட மேற்படிப்பை முடித்த கையோடு, தாம்பரத்தில் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (National Institute of Siddha) மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்தார். அந்நிறுவனத்திலேயே நோய் மதிப்பீட்டு ஆசியராக (Clinical Teacher) உயர்வு பெற்ற மருத்துவர் வேலாயுதம் அதன் பிறகு துணை மருத்துவக் கண்காணிப்பாளராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடித்தார்.
அதன் பிறகு 2012ம் ஆண்டு, சேலம் சிவராஜ் சித்த வைத்தியக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
மேலும் அவர் 2015ம் ஆண்டு வரை இம்ப்காப்ஸ் (IMPCOPS) என்ற புகழ் பெற்ற நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியில் இருந்தார். அவர் பணியாற்றிய பல்வேறு நிறுவனங்களும், அங்கே அவர் பெற்ற அனுபவங்களும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
பதவி – விரிவுரையாளர்
தொழில் – ஆசிரியர்
பதவி – மூத்த மருத்துவ அலுவலர், நோய் மதிப்பீட்டு ஆசிரியர் &
துணை மருத்துவக் கண்காணிப்பாளர்
தொழில் – ஆசிரியர்
பதவி – இணைப் பேராசிரியர்
தொழில் – ஆசிரியர்
பதவி – துணைத் தலைவர்
தொழில் – AYUSH மருந்துகளின் நிருவாகமும் உற்பத்தியும்