மனித உடலின் முதுகில் உள்ள முதுகெலும்பில் மொத்தம் 33 எலும்புகள் உள்ளன. உடல் கூறின் படி இந்த 33 முதுகெலும்புகளை ஐந்து பிரிவாகப் பிரிப்பார்கள். அவை கழுத்துப் பகுதியில் உள்ள 7 முதுகெலும்புகள் (cervical spine), மேல் முதுகெலும்புப் பகுதி அல்லது நெஞ்சகப்பகுதிக்கு நேர் பின்னே உள்ள 12 முதுகெலும்புகள் (thoracic spine), கீழ்முதுகெலும்புப் பகுதியில் உள்ள 5 முதுகெலும்புகள் (lumbar spine), திருவெலும்பு (sacrum), காக்சியம் அல்லது வால் எலும்பு (coccyx) ஆகும். திருவெலும்பிலும், வால் எலும்பிலும் தலா ஐந்து எலும்புகள் உள்ளன. ஆனால் அவை ஐந்தும் ஒன்றாய் உருகிய நிலையில் ஒரே எலும்பு போன்றே காட்சியளிக்கும். இந்த முதுகெலும்புகள் எல்லாம் ஒன்றன்கீழ் ஒன்றாக சேர்ந்து வில்லைப் போன்ற ஒரு வளைவு கொண்ட அமைப்பாக இருக்கும்.
சகன வாதமும் தண்டக வாதமும்
கழுத்துப் பகுதியில் உள்ள 7 முதுகெலும்புகளில் ஏற்படும் அழற்சி சகன வாதம் எனப்படுகிறது. அதே போல கீழ்முதுகெலும்புப் பகுதியில் உள்ள 5 முதுகெலும்புகளில் ஏற்படும் அழற்சி தண்டக வாதம் எனப்படுகிறது. இவை இரண்டும் முதுகெலும்புப் பகுதியில் ஏற்படும் ஒரு வகை வாய்வு என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த இரண்டு வகை வாதமும் பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்களுக்கே ஏற்படுகின்றன. ஆனால் தற்காலத்தில் மோசமான வாழ்க்கை முறையாலும், அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வதாலும், சரியான மிடுக்குடன் உட்காராததாலும், அதிகமாக இளம் வயதினருக்குக்கூட சகன வாதமும் தண்டக வாதமும் ஏற்படுவதைக் காண்கிறோம்.
சகன வாதமும் தண்டக வாதமும் ஏற்படுத்தும் அறிகுறிகள்
மூப்பு ஏற்படும் போது என்னென்ன காரணங்களால் சகன வாதமுமோ தண்டக வாதமுமோ ஏற்படுகிறது?
• கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகளின் இயக்கத்தையும், கீழ்முதுகெலும்புப் பகுதியில் உள்ள
முதுகெலும்புகளின் இயக்கத்தையும் சித்த மருத்துவர் உணர்ந்து கணிப்பார்.
• அனுபவமிக்க சித்த மருத்துவர்கள் தொடு முறையில் அழுத்தம் கொடுத்து எந்த புள்ளியிலாவது தண்டு
வடத்தையோ, நரம்பையோ பாதிக்கிறதா என்று அறிந்து நோயின் தன்மையை கணிப்பார்கள்.
• நாடி பிடித்து குற்றம் கணிக்கப்படுகிறது. நாடியில் வாதம் இயல்புக்கு மாறாக உயர்நிலையில் இருக்கிறதா என்று
சித்த மருத்துவர் கணிப்பார்.
• நெய்குறி முறையில் சிறுநீரில் விடப்பட்ட நல்லெண்ணெய்த்துளி பாம்பு போன்ற வடிவத்தில் பரவினால் வாதம்
பிறழ்ந்து உள்ளது என்று பொருள்.
• தற்கால மருத்துவத்தில் உள்ள ஸ்கான் அறிக்கைகளைக் கூட சித்த மருத்துவர் கேட்க வாய்ப்புண்டு. அதில்
முதுகெலும்புகள் எந்த அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன என்று தெளிவாக கணிக்க முடிகிறது.
• வாதத்திற்கு எதிரான அஸ்வகந்தா, பிரண்டை, சேராங்கொட்டை, போன்ற மூலிகைகளும், பிற வெளிப்பூச்சு
களிம்புகளும் பரிந்துரைக்கப் படுகின்றன.
• புளிப்பு சுவையை கொடுக்கும் உணவுப் பண்டங்களான புளி, தக்காளி, மற்றும் கிழங்கு வகைகளான உருளை,
கருணை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
• உணவில் தாராளமாக பூண்டும், பெருங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.
பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.
குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.