இரைப்பு நோய்

மருத்துவ விளக்கம்

இரைப்பு நோய்


நுரையீரலுக்கு செல்லும் காற்றின் வழி குறுகும்போது சளி மிகுதியாக உருவாகிறது. அதனால் மூச்சுக்காற்று செல்லும் பாதை அடைபட்டு மூச்சு விட பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையே இரைப்பு நோய் எனப்படும். இப்படி மூச்சு இரைக்கும்போது இருமல், இரைப்பு, மூச்சு வாங்குதல் போன்ற தொல்லைகள் ஏற்பட்டு அதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். இரைப்பு நோய்க்கு சித்த மருத்துவத்தில் மிக நல்ல தீர்வுகள் உண்டு.

இரைப்பு நோயினால் ஏற்படும் இயல்பான அறிகுறிகள்

  • மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு வாங்குதல்
  • நெஞ்சு இறுகிப்போன ஒரு உணர்வு
  • நெஞ்சு வலி
  • மூச்சு விடும்போது இரைத்தல். கூடவே விசில் அடித்தது போன்ற ஒரு ஓசை கேட்கும்.
  • சளியோ, காய்ச்சலோ பிடிக்கும்போது இரைப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

மோசமான இரைப்பு நோயினால் ஏற்படும் அறிகுறிகள்

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் அடிக்கடி தோன்றுவது. அப்படி தோன்றும்போது நோயாளியின் இயல்பு வாழ்க்கையை அது பாதிக்கத் துவங்கியிருக்கும்.
  • வெளிப்புற தட்பவெப்பம் மாறும்போது இரைப்பு அதிகமாகும். தூசு, செல்லப்பிராணிகளின் மேல் உள்ள பொடுகு, தொழிற்ச்சாலைகள் வெளியேற்றும் மாசடைந்த புகை, போன்றவை இரைப்பை அதிகப்படுத்தும்.

இரைப்பு நோயை உண்டு செய்யும் காரணிகள்

  • மகரந்தம், பூஞ்சை, நுண்ணியிர் விதைகள், தூசு, இறகு, போன்ற காற்றில் மிதக்கும் நுண் துகள்கள்.
  • சளியும் (ஜலதோஷம்) காய்ச்சலும்
  • வெப்பநிலை இறங்கும்போது (பனி)
  • புகையும் வேறு சில மாசுபடுத்திகளும்
  • மன அழுத்தமும், மனச்சோர்வும்
  • சில மருந்து மாத்திரைகள்
  • சில உணவுகள் உண்டு செய்யும் ஒவ்வாமை
  • நெஞ்செரிச்சல்

சித்த மருத்துவத்தில் இரைப்பு நோயறிதல்

நாடி பிடித்து குற்றம் கணிக்கப்படுகிறது. நாடி பிடிக்கும்போது கபமும் வாதமும் அதன் இயல்பு மாற்றத்திற்கு அறியப்படுகிறது. கூடவே நோயாளிகள் உணரும் அறிகுறிகளைக் கொண்டு நோய் அறிதல் செய்யப்படுகிறது.


சித்த மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கான மருத்துவம்

– இஞ்சி, துளசி, ஆடாதோடை, கருமிளகு போன்ற காரத்தன்மை பொருந்திய மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
– சித்த மருத்துவர் கொடுக்கும் பத்திய உணவு முறைக்கு நோயாளிகள் தங்களது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.


அனுபவமிக்க சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் பற்றிய சிறு குறிப்பு


0123456789001234567890

ஆண்டு கால

அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.



012345678900123456789001234567890

கட்டுரைகள்

பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.



01234567890012345678900123456789001234567890

நோயர்கள் வரை

குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.