முன்பெல்லாம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இவை முகப்பொலிவை மட்டும் தரவில்லை. முகத்தில் உண்டாகும் நோய் தாக்குதலில் இருந்து பெண்களை காப்பாற்றின. ஆனால் இன்றோ முகத்திற்கு பொலிவைத் தரும் க்ரீம்களை அப்பிக் கொள்வதும், ஸ்டிக்கர் பொட்டுகளையும், பல நிற சாந்துகளையும் நவீனம் என்று கூறி இட்டுக் கொள்வதும், அதனால் ஒவ்வாமை உண்டாவதும், அதற்கு மருத்துவமனைகளை நாடுவதும் வழக்கமாகிவிட்டது.
அதனடிப்படையில் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை தயாரிப்பது எப்படி என்பதையும், நல்ல குங்குமத்தின் மருத்துவ பலன்களையும் ஆராய்வோம்.